திசையன்விளை, மார்ச்4: அய்யா வைகுண்டர் 189வது அவதார தின விழாவை முன்னிட்டு திசையன்விளை வந்த வாகன பேரணிக்கு ஊர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட பேரணி காயாமொழி, உடன்குடி, தண்டுபத்து, தட்டார்மடம், நடுவக்
குறிச்சி வழியாக திசையன்விளை வந்தடைந்தது. பேரணிக்கு தலைமை வகித்து வந்த பூஜிதகுரு நேமிரிஸ் மற்றும் அன்புக்கொடி மக்களையும் ஊர் எல்லையில் சுடலை ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ், எருமைகுளம் மன் நாராயண சுவாமி நிழல் தாங்கல் சார்பில் குருசாமி சகோதரர்கள், சமக ஒன்றிய செயலாளர் சரவணன், விஜயபெருமாள் வரவேற்றனர். தொடர்ந்து மேளதாளம், செண்டாமேளம், வாணவேடிக்கை முழங்க சிறுமியர் கோலாட்டத்துடன் பட்டு குடை பிடித்தபடி நடைபயண ஊர்வலம் சென்றது.
வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பணகுடி பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வந்த ஸ்டீபன், அங்குள்ள கிராமத்தில் 10வது படிக்கும் மாணவி ஒருவரிடம் தனது திருமண வாழ்க்கையை மறைத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த மாணவியும் சம்மதம் தெரிவிக்கவே, அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் ஸ்டீபனை கண்டித்துள்ளனர்.இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டீபனும் மாணவியும் திடீரென மாயமாகினர். இதையடுத்து மாணவியின் தாய் பணகுடி போலீசில் தனது மகளை ஸ்டீபன் கடத்தி சென்றதாக புகார் அளித்தார். போலீசார் மாணவியையும், ஸ்டீபனையும் தேடி வந்தனர். அப்போது, இருவரும் நாகர்கோவிலில் ஒருவரின் மாட்டு பண்ணையில் தங்கி வேலை பார்ப்பதாக தகவல் கிடைக்கவே போலீசார் அங்கு சென்று இருவரையும் பணகுடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.